lundi 8 avril 2013

திறமைக்கொண்ட இளைய தலைமுறையினரிடம் தலைமை;ஜே.வி.

மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பியை) உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையிலும் நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலும்  திறமைக்கொண்ட இளைய தலைமுறையினரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைக்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க தெரிவித்தார்.

குருணாகலில் கடந்தவாரம் இறுதியில் நடைபெற்ற 'ஏப்ரல் 71 வீரர்கள்' தினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அறிவிப்பை அவர் விடுத்தார்.

ஜே.வி.பி. தலைவர் ஒரு சக்கர நாற்காலியில் செல்லும் வரையிலும் கட்சி தலைமையாகவே இருப்பதற்கு விரும்பவில்லை. 
வாழ்க்கை வர்க்க போராட்டமானது தலைமுறை இருந்து தலைமுறைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

'நாங்கள் எப்போதும் தலைவர்கள் இருக்க விரும்பவில்லை,' என கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ சமீபத்தில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தார். ஆதனை ஒரு முன்னோடியாக அமைத்துக்கொள்ளவேண்டும்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 

Aucun commentaire:

Enregistrer un commentaire