mardi 19 août 2014

தண்ணி குடுப்பம்' எண்டு சொன்னாரா 'தண்ணி காட்டுவம்' எண்டு சொன்னாரா.பொய் ஐங்கரநேசன்ரை புலுடாக்கதைகளுக்கு குறைவேயில்லை

பொய் ஐங்கரநேசன்ரை புலுடாக்கதைகளுக்கு குறைவேயில்லை.
Iyngaranesanபாருங்கோ... கொஞ்ச நாளைக்கு முதல், ஆள் காரைநகருக்கு வந்தரெல்லோ.... வந்து என்ன சொன்னார் எண்டால்.....

'தீவுப்பகுதியின்ரை தண்ணீர்ப்பிரச்சினையை இன்னும் அஞ்சாறு மாசத்தில வடமாகாணசபை முழுசாத் தீர்த்திடும். இப்ப காரைநகருக்கு ஒழுங்காகத் தண்ணி கிடைக்கிறதுக்கு முழு ஏற்பாடும் செய்திருக்கிறம். மாகாணசபைக்கு வாற காசை மத்திய அரசு கொள்ளை அடிக்கிது. அதால புலம்பெயர் நாடுகளில இருக்கிற சொந்த பந்தங்கள் எங்களுக்குக் காசை அனுப்புங்கோ... நாங்கள் எங்கட மக்களுக்கு ( சாய்... சனங்களில என்ன ஒரு பாசம்?) தண்ணிகுடுப்பம்' எண்டு சும்மா போட்டுத்தாக்கியிருக்கிறார்.

'தண்ணி குடுப்பம்' எண்டு சொன்னாரா 'தண்ணி காட்டுவம்' எண்டு சொன்னாரா எண்டதை மறந்து போனன்.
இப்பிடி ஒரு நெஞ்சறிஞ்ச பொய்யைச் சொல்லிறதுக்கும் ஒரு திராணி வேணும்.

'அரசியல் எண்டு வந்திட்டால் உதெல்லாம் சாதாரணம்' எண்டு சின்ராசண்ணை சொல்லிறார்.
எண்டாலும் எதுக்கும் ஒரு அளவு கணக்கிருக்கெல்லோ...!
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும் எண்டு சொல்லுவினை.

ஆனால், பொய்யை நாக்குக் கூசாமல் சொல்லிறதுக்கு இந்த ஐங்கரநேசனுக்கு எப்பிடித்தான் மனசு வந்திதோ....

இதைப்பற்றிக் கேட்கிறதுக்கெண்டு ரண்டு மூண்டு ஊடகக்காரர் ஆளிட்டப் பேட்டி எடுக்கக் கேட்டவையாம்.
ஆனால், ஆள் அதுக்கு மெல்ல மழுப்பி வெட்டிப்போட்டுது.
பேட்டி எண்டு வந்திட்டால், நெத்திக்கு நேர நாலு கேள்வியைப் போட்டு மடக்குவாங்கள்.

இதென்ன காசு வாங்கிக் கொண்டும் கைக்கடிகாரம் வாங்கிக்கொண்டும் நாலு செய்தியை இனிப்பாக எழுதிப்போடுகிறவங்களா, பொய். ஐங்கரநேசனிட்டப் பேட்டியைக் கேட்ட ஆக்கள்?

காசும் கைக்கடிகாரமும் வாங்கிற ஆட்கள் 'பொய்'. ஐங்கரநேசனுக்கு மட்டும் இனிப்பான 'பொய்'ச் செய்திகளைத்தானே அள்ளி அள்ளி வழங்குவினம்.
ஐங்கரநேசனிட்டப்பேட்டி கேட்ட ஆட்கள் அப்பிடியான ஆட்களில்லை. இவை சனங்களுக்கு நாலு நல்ல விசயம் நடக்க வேணும் எண்டு சிந்திக்கிற ஊடகக் காரர்.
எண்டபடியால்தான் இந்த ஊடகக்காரரிட்ட சிக்கப்படாது எண்டு வலு கவனமாக இருக்கிறார் திருவாளர் 'பொய்'. 
இந்தப் பொய் என்ன சொல்லியிருக்கெண்டால், தீவு முழுவதுக்கும் தாங்கள் தண்ணீர் விநியோகத்தைச் சீர்ப்படுத்துவமாம்.

இதைக் கேட்ட தீவுச்சனமெல்லாம் சிரிப்பாய் சிரிக்குது.
பச்சைப்பொய்யும் புலுடாக்கதையும் இது எண்டு எல்லாச் சனத்துக்கும் நல்லாய்த்தெரியும்.

இவர் (பொய். ஐங்கரநேசன்) ஒரு மூண்டு மாசத்துக்கு முந்தி இருந்தாப்போல நெடுந்தீவுக்குப் போனபோது அங்க விட்ட புலுடாக்கதைகளைப் பற்றி இப்ப ஒருக்கால் நினைச்சுப்பாருங்கோ...

இதைப்பற்றி ஒருத்தர் ஐங்கரநேசனிட்டையே நேரில கேட்டிருக்கிறார்.

இதுக்கு 'பொய்' என்ன சொல்லியிருக்கெண்டு தெரியுமா? 'அரசியல் எண்டால் அப்பிடித்தான். அரசியல்ல இதெல்லாம் சகஜம் எண்டு விட்டிடுங்கோ... சொல்லிற எல்லாத்தையும் செய்யேலாது எண்டு எங்களுக்கும் தெரியும். அதுக்காக தண்ணி தரமாட்டம் எண்ட சொல்ல முடியுமா? அப்பிடிச் சொன்னால் சனங்கள் விட்டிடுமா' எண்டு திரும்பக் கேள்வியாகக் கேட்கிறார் திரு. பொய்.

அது சரிதான். ஆனால், இந்த அரசியல்தான் உங்களைக் கருவறுக்கும் திருவாளர் பொய் அவர்களே...!
ஏனெண்டால், பொய்யை ஒரு நாளும் சனங்கள் விரும்புறேல்ல.

நீங்கள் சனங்களுக்கு உண்மையைச் சொல்லுங்கோ.

வெற்றியும் தோல்வியும் சகஜம் எண்டு விட்டிடுங்கோ.

அதுக்காக சொந்த மக்களுக்கே நாக்குக் கூசாமல் பொய் சொல்லிறதும் ஏமாத்திறதும் தங்கட காரியத்தை மட்டும் பார்க்கிறதும் கூடவே கூடாது.

பொய். ஐங்கரநேசன் ரியூட்டறியல சாதித்த விடயங்களை இப்ப அரசியல்ல போட்டுடைக்கிறார்.

அரசியல் ஒரு சாக்கடை எண்டதை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கிறார் ஐயா பொய். ஆமாம் பொய் ஐங்கரநேசன்.
இந்த மாதிரிப் பொய்யர்களின்ரை கையிலதான்  கிடைச்சிருக்கு மாகாண சபை.

பொய்யர்கள் எல்லாருமாகச் சேர்ந்து தங்கட காலுக்கை போட்டு மிதிக்கிறாங்கள் சனங்களை.

சனங்கள் தாங்கள் விட்ட தவறுக்கான தண்டனையை அனுபவிச்சுக்கொண்டிருக்கினம்.

படிப்பும் அறிவும் எதற்காக? ஊரில நாட்டில நடக்கிற நல்லது கெட்டதை அறியிறதுக்கும் நல்லவர் ஆர்,

கெட்டவர் ஆர் எண்டு தெரிஞ்சு கொள்ளிறதுக்கும்தானே....!

இப்ப சொல்லுங்கோ தீவுக்கு ஒழுங்காக தண்ணி வருமா இல்லையா எண்டதை. பொய்யரால அதைச் செய்ய முடியுமொ எண்டு கேட்டுச் சொல்லுங்கோ பார்ப்பம்.                              
-  வடபுலத்தான்

Aucun commentaire:

Enregistrer un commentaire