mardi 5 août 2014

வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை: உயர் நீதிமன்றம்

வடக்கு மாகாண பிரதான செயலாளருக்கு பணிப்புரை விடுக்க வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் அரச சேவை ஆணைக்குழுவிற்கே உள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.வடக்கு மாகாண பிரதான செயலாளர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பின் போது பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இந்த தீர்ப்பினை வழங்கினார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே ஸ்ரீபவன் மற்றும் ரேஹினி  மாறசிங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையிலேயே இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire