samedi 30 août 2014

விபச்சாரத்துக்கு அனுப்பி விட்டு குழந்தையை பார்த்துக் கொள்ளும் கணவன்! கொழும்பு மாநகரில் (Video)

நாட்டில் விலைவாசி கூடக் கூட திருடர்களும் வன்முறைகளும் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. இருந்த போதிலும் அரசு மக்களுக்கு பல அபிவிருத்தித் திட்டங்களையும் செய்து கொண்டு வருவதை பல ஊடகங்கள் மூலம் காண முடிகின்றது.வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் அனைத்து மக்களும் தமது உடம்பில் உள்ள வியர்வை சிந்தி விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கை போன்றவற்றினையும் மேற்கொண்டு வந்தனர். ஆனாலும் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் மக்கள் தமது அன்றாட உணவுக்காக கூலித் தொழில்களை தேடி அலைய வேண்டியுள்ளது.அதில் குறிப்பாக ஆண்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்றே தொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நாட்டில் கூலித் தொழிலாளர்களுக்கு தற்போது வேலைகள் குறைவாகவே உள்ளது. காரணம் என்னவென்றால் இலங்கை நாடு அபிவிருத்தி அடைய அடைய பல இயந்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றது.இப்பொழுது தமது வயிற்றுப்பசியை போக்க புதிய கண்டுபிடிப்புக்களை ஆண்கள் கண்டு பிடித்துள்ளனர். தலைநகரான கொழும்பில் நடந்து கொண்டிருக்கும் காட்சியே இது!கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் தூர இடங்கலிலிருந்து வரும் நபர்களின் வருகையை வரவேற்கும் விதத்தில் ஆசனங்கள் பதிவு செய்யப்படும். இங்கே அறைகள் உள்ளது. என பெயர் பலகைகளை போட்டுக் கொண்டு இளம் வயது பெண்களை விபச்சாரத்துக்கு ஈடுபடுத்தி தமது தொழிலாக செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. தலைநகரில் ஒவ்வொரு விபச்சார விடுதிக்கு அருகிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் விபச்சார விடுதிகள் ‘றூம் எவைலபில் ‘ என பெயர் போடப்பட்டு விபச்சாரம் இடம் பெற்று வருகின்றது.அத்துடன் கணவன் மனைவி ஒற்றுமையாக இணைந்து இரவு நேரத் தொழிலாக விபச்சாரத்தை செய்வதையும் வீடியோ மூலம் காண முடிகின்றது. கணவன், மனைவி, பிள்ளை போன்றோர் ஒன்றாக இருக்கும் வேளை பிள்ளையை கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனைவி உதட்டுக்கு லிப்டிக் அடித்துக் கொண்டும் தலையை சீவிய வண்ணமாக விபச்சார தொழிலுக்கு ஆயத்தமாகுவதையும் காணக் கூடியதாக உள்ளது.எனவே தன்னுடைய மனைவியை இப்படியான தொழில்களில் ஈடுபடுத்தும் கணவர்மார்கள் எமது நாட்டுக்கு தேவைதானா எனவும் கேள்விக் குறியாக உள்ளது. நாமும் நமது உறவுகளும் எச்.ஐ.வீ தொற்று நோயிலிருந்து தப்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
(அப்துல்சலாம் யாசீம்) 

Aucun commentaire:

Enregistrer un commentaire