vendredi 22 août 2014

விதிமுறைகளை மீறி சீன எல்லையில் ஆகாஷ் ஏவுகணை

ர்வதேச எல்லை விதிமுறைகளை மீறி, சீனா அடிக்கடி இந்திய பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், சீன போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்திய வான் எல்லையில் ஊடுருவுகின்றன. இதை தடுக்கும் வகையிலும், இந்திய ராணுவ பலத்தை பிரதிபலிக்கும் வகையிலும், வடகிழக்கு மாகாண பகுதியில், 4,057 கி.மீ., தொலைவிலான எல்லை பகுதியை உள்ளடக்கிய இடங்களில், தரையிலிருந்து விண்ணில் தாக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, இந்திய எல்லையில், குவாலியர் மற்றும் சுகோய் ஆகிய விமானப்படை தளங்களில், மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ஆகாஷ் ஏவுகணைகள் அங்கு பொருத்தப்படுகின்றன. இதன் மூலம், வடகிழக்கு எல்லை பகுதியில் தற்போது நிலவும் மிரட்டலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire