vendredi 22 août 2014

சிறுமிகள் கதாநாயகியாக நடிக்க தடை கோரி வழக்கு

தமிழ் திரைப்படங்களில் 18வயதுக்குறைவான பெண்கள் நடிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று முத்துலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  நேற்று பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில அவர் கூறியிருப்பதாவது,, இளம் பெண்களை இப்போது சினிமாக்களில் அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள். ஆனால், இளம் பெண்களை படத்தில் நடிக்க வைக்கக் கூடாது.
தமிழ் படங்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் துளசி, லட்சுமி மேனன், சந்தியா, கார்த்திகா ஆகியோர் 18 வயது பூர்த்தியடையாதவர்கள். இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக் காட்சியிலும் நடிக்க வைக்கப்படுகிறார்கள். பெண்களை தவறாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்திற்கு கீழ், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் முத்துச்செல்வி கூறியுள்ளார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire