jeudi 28 août 2014

மக்கள் தீர்ப்பே மகத்தானது இனியாவது வாகண ஓட்டுனர்கள் திருந்துவார்களா???????

1(6778)
யாழ். நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த  25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணியை அவ்வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கர்ப்பிணி பெண் பலியானதையடுத்து ஆத்திரமுற்ற  ஊரவர்கள் சேர்ந்து விபத்துக்கு காரணமான அந்த வாகனத்தை  தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.இந்த சம்பவம்,இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதையடுத்து வாகனத்தின் சாரதி தப்பித்து ஓடிவிட்டார். விரைந்து செயற்பட்ட பொலிஸார்,  துரத்தி , வாகனத்தின் சாரதியை தேடிப்பிடித்து கைது செய்தனர் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire