mercredi 20 août 2014

இலங்கை வாசிகள் அகதிகள் என்ற பட்டத்தை பெற்றுள்ளனர் பல நாடுகள் அவர்கள் பற்றிய தகவல்களை தர மறுக்கிறது;ராஜபக்சே

கொழும்பு
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அடாவடியாக கூறினார்.
ஐ.நா. குழு விசாரணைஇலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே 2009–ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டது. இதுபற்றி ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை தலைவர் நவிபிள்ளை தலைமையில் ஒரு குழு விசாரணை நடத்தி வருகிறது. ஐ.நா. விசாரணை குழுவுக்கு இலங்கை விசா வழங்க மறுத்துவிட்டது. இதனால் நவிபிள்ளை, ‘‘இலங்கை ஒத்துழைப்பு வழங்க மறுத்தாலும், ஐ.நா.வின் விசாரணை தொடரும். இலங்கைக்கு வெளியில் இருந்தே ஏராளமான தகவல்கள் எங்களுக்கு கிடைத்து வருகின்றன’’ என்றார்.
அனுமதிக்க மாட்டோம்இந்த விவகாரத்தில் இதுவரை எதுவும் பேசாமல் இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, நேற்று நேரடியாக கருத்து தெரிவித்தார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தினருக்கு பேட்டி அளித்த ராஜபக்சே கூறியதாவது:–
ஐ.நா. விசாரணை குழுவை நாங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். ஐ.நா. மனித உரிமை குழுவுக்கு இலங்கையில் விசாரணை நடத்த உரிமை இல்லை. மக்கள் காணாமல்போனதாக ஏதாவது புகார்கள் வந்தாலோ, குற்றச்செயல் பற்றிய புகார்கள் குறித்தோ உள்நாட்டு குழுக்கள் மூலமே விசாரணை நடத்தப்படும். இதற்காக 3 சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவுக்கு பாகிஸ்தான் (அமீர் பிலால் சூபி), இந்தியா (அவ்தாஷ் கவுஷல்) ஆகிய நாடுகளில் இருந்து 2 நிபுணர்கள் ஆலோசனை வழங்குவார்கள். ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் என இருதரப்பிலும் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றியும் அவர்கள் விசாரணை நடத்துவார்கள். இந்த ஆலோசனை குழு, சர்வதேச விசாரணை குழுவுக்கு மாற்றாக அமைக்கப்படவில்லை.
காணாமல் போனவர்கள்இந்த உள்நாட்டு குழுவுக்கு இதுவரை 20 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை நடவடிக்கையை அவர்கள் தொடங்கியுள்ளனர். யார் ஐ.நா. விசாரணை கேட்டார்களோ அவர்கள் தவிர, வேறு யாரும் ஐ.நா. விசாரணையை அக்கறையாக எடுத்துக்கொள்வதாக நான் கருதவில்லை.
இலங்கை அரசு காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் இதர நாடுகளில் இருக்கிறார்களா? என்றும் ஆராய்ந்து வருகிறது. சில நாடுகளில் இலங்கை வாசிகள் அகதிகள் என்ற பட்டத்தை பெற்றுள்ளனர். ஆனால் பல நாடுகள் அவர்கள் பற்றிய தகவல்களை தர மறுக்கிறது.
இவ்வாறு ராஜபக்சே கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire