samedi 9 août 2014

முன்னிலைத் தலைவர்களில் ஒருவரான கிட்டு இந்தியாவின் உளவாளி!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னிலைத் தலைவர்களில் ஒருவரான கிட்டு இந்திய புலனாய்வு பிரிவான ரோவின் கையாளாக விளங்கினார் என்கிற பேரதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக புதிதாக வெளிவந்து உள்ள திடுக்கிடும் தகவல் இதுதான். ராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமான அன்பராக விளங்கியவர் ஆர். டி. பிரத்தன். ராஜிவ் மற்றும் சோனியாவுடன் எனது வருடங்கள் என்கிற தலைப்பில் இவர் சுய சரிதை ஒன்றை எழுதி உள்ளார். இதிலேயே கிட்டு ரோவின் கையாள் என்பதை இவர் வெளிப்படுத்தி உள்ளார். கிட்டுவுக்கு காந்தி குடும்பத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு இருந்தது என்பதையும் இவர் இந்நூலில் புட்டு வைத்து உள்ளார். ராஜிவ் காந்தி காந்தி படுகொலை தொடர்பான புலனாய்வு விசாரணை மேற்கொண்ட சி. பி. ஐ தலைமை அதிகாரி கே. ராகோத்தமன். ராஜிவ் காந்தி படுகொலைச் சதி என்கிற புத்தகத்தை இவர் எழுதி உள்ளார். கிட்டுவை ரோ உளவாளியாக பயன்படுத்தி இருந்தார் என்பதை ரோவின் தலைவர் கௌரசங்கர் வாஜ்பாய் ஒப்புக் கொண்டு இருந்தார் என்பதை ராகோத்தமன் இந்நூலில் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் கிட்டுவின் பரம வைரியான மாத்தையாவை அல்லவா பிரபாகரன் போட்டுத் தள்ளியுள்ளார் உளவாளி என்று. இது எப்படி இருக்கு?

Aucun commentaire:

Enregistrer un commentaire