jeudi 28 août 2014

வடக்கு மாகாண சபைக்கு வந்த நிதி திரும்பிப்போகுது....

வடக்கு மாகாண சபைக்கு வந்த நிதி போதாது எண்டு முதலமைச்சர் தம்பட்டம் அடிச்;சுக்கொண்டு திரியிறார். 

ஆனால் வந்த நிதி திரும்பிப்போகப் போகுது எண்டது முதலமைச்சருக்குத் தெரியுமோ?Wigneswaran-cmதெரியாதோ?

கடந்த பட்ஜெட்டில் வடக்கு மாகாண சபைக்கு இலங்கையில் இரண்டாவது கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்பிடி ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தாமல் மூண்டில் ரண்டு பங்கு காசு இப்ப திரும்பிப் போற நிலையில இருக்கு.

 இதுக்கு யார் பொறுப்பு? முதலமைச்சர் இதைப்பற்றி வாய் திறப்பாரா? அல்லது மனந்திறப்பாரா? அல்லது கண் திறப்பாரா?

வடக்கு மாகாண சபைக்கு நிதி காணாது. அரசாங்கம் திட்டமிட்டு இந்த மாகாண சபையை புறக்கணிக்குது எண்டமாதிரி எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் புலம்பிக்கொண்டே இருக்கினம்.

ஆனால் வடமாகாண சபையின்ர பட்ஜெட்டைப் பற்றிக் கேட்டாலோ வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பற்றிக் கேட்டாலோ ஒழுங்காகப் பதில் சொல்லுறதுக்கு ஒருதருக்கும் விபரமும் தெரியாது விளக்கமும் தெரியாது. இப்பிடியான நிலையிலதான் மாகாண சபையில மன்னர்கள் இருக்கினம். 

அட, கொஞ்சம் விசயம் விளங்கின சுமந்திரன் போன்ற ஆக்கள் கூட சிலவேளை வெங்காயக்கதைதான் கதைக்கினம். ஒதுக்கப்பட்ட நிதியை வைச்சு செய்யக்கூடிய வேலைகளை செய்யலாம். மீதி நிதியை தேவையெண்டு கோரலாம்.

ஆனால் வந்த காசையே பயன்படுத்தத் தெரியாமல் திரும்பிப் போக விட்டுட்டு அணில் ஏறவிட்ட நாய் போல ஏமளாந்திக்கொண்டு இருக்கிற கூட்டமாக மாகாண சபைக்காரர் இருக்கினம். 

அரசாங்கத்தை திட்டித் திட்டியே தங்கட குறைகளை மறைக்கப் பாக்கினம்.

வாக்குப் போட்ட மக்களுக்கெண்டு வந்த காசை திரும்பிப்போக விடுகிற இந்தக்கூட்டம் மாகாண சபை உறுப்பினர் எண்ட பதவிச் சலுகைகளையும், பாராளுமன்ற உறுப்பினர் எண்ட பதவிச் சலுகைகளையும் ஆண்டு அனுபவிக்காமல் விடுகிறதில்லை.

தங்களுக்கெண்ட சலுகைகள் ஒண்டையும் விட்டுவிடாமல் அனுபவிக்கிற இவை சனங்களின் உரிமையை மட்டும் ஏன் பொருட்படுத்தாமல் விடுகினம். 

இது பச்சைத் துரோகம் அல்லவா? 

ஆனால் இந்தத் துரோகத்தை தலைமுறை, தலைமுறையாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மனங்கூசாமல் செய்து வருகினம். 

இப்படியெல்லாம் செய்துகொண்டு தாங்கள் தான் தியாகிகள் எண்டும், புனிதர்கள் எண்டும், நீதிமான்கள் எண்டும் வெளியில் காட்டுகினம்.

சொந்த மக்களின்ர தலையிலையே நெருப்பு வைக்கிற இந்தக் கூட்டத்தை நம்பித்தான் ஆதரிக்க வேண்டுமென்று படிச்சவையும், புத்திஜீவிகளும் வாக்களித்து வாங்கியினம்.

எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில உருப்படியாக ஒரு காரியத்தையாவது இந்தத் தேசிய பித்தர்கள் செய்திருக்கிறார்களா?

இடதுசாரிகளை தூற்றி அவதூறு செய்து ஓரங்கட்டினார்கள்.

மாற்றுக் கருத்தாளர்களை துரோகிகள் எண்டு வசை பாடினார்கள்.

 யதார்த்த வாதிகளை காட்டிக்கொடுப்போர் எண்டார்கள்

நியாயமாக நடப்போரை நம்ப முடியாதவர்கள்  எண்டார்கள்

ஆனால் தங்களுடைய சுயநலத்தைப் பற்றியும் ஏமாற்றைப் பற்றியும் நடக்கவே நடக்காத அரசியல் அபிலாசையைப் பற்றியும் இவர்கள் கதைப்பதே இல்லை. 

எடுத்ததற்கெல்லாம் எதிரே நிற்பவரை குற்றஞ் சொல்லிக் குறை சொல்லியே மக்களை ஏமாற்றி வருகினம்.

இவர்களை நம்பும்வரை தமிழ் மக்களுக்கு விமோசனமே இல்லை.

 இதற்கு மேலும் ஓர் உதாரணமே இப்ப மாகாண சபைக்கு வந்த நிதி திரும்பி மத்திய அரசுக்கே போவதும் ஆகும்.                                                                                                                 -    வடபுலத்தான்

Aucun commentaire:

Enregistrer un commentaire