samedi 29 septembre 2012

நேபாளத்தில் விமான விபத்து: 19 பேர் பலி


நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து எவரெஸ்ட் பிராந்தியத்தை நோக்கிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 19 பேரும் பலியாகியுள்ளனர்.

எவரெஸ்ட் பிராந்தியத்திலுள்ள லுக்லா நகரை நோக்கிச் சென்ற வேளையிலேயே குறித்த சிறிய ரக விமானம் மனோஹரா என்ற ஆற்றங்கரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.


விமானம் புறப்பட்டு சில நிமிடங்களுக்குள் அதன் பின்பக்கம் சூடாக மாறுவது உணரப்பட்டதாகவும் இதனால் விமானிகள் விமானத்தை ஆற்றங்கரையில் தரையிறக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது விமானத்தில் 16 பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். பயணிகளில் குறைந்தது 12 பேர் வெளிநாட்டுப் பிரஜைகளாவர்.



விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 9 பேர் பிரித்தானியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தின் கறுப்புப் பெட்டி தற்போது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதும் இயந்திரக்கோளாறே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.


நேபாளத்தின் மலைப் பிராந்தியங்களில் சிறி ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சிறிய விமானங்களில் பயணிக்கும் போது பிரயாணிகள் கவனமாக இருக்கவேண்டுமென நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire