samedi 29 septembre 2012

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவராக த.தே.கூ.யின் சி.தண்டாயுதபாணி தெரிவு,

நடந்து முடிந்த தேர்தலில் (06) உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கு தமது வாக்குகளை வழங்கிய மட்டு மாவட்ட மா மேதைகள் சம்பந்தனால் புறமொதுக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி த.தே. கூட்டமைப்பில் களமிறங்கிய வேட்பாளர்களில் ஆகக்கூடுதலான வாக்குகளைப்பெற்றவரும் (29.141) கடந்த மாகாண சபை நிர்வாகத்தில் நான்கு வருடகாலம் பணியாற்றியவருமான இரா துரைரெத்தினம் அவர்கள் பழிவாங்கப்பட்டு திரு சி தண்டாயுதபாணி எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ளமை திட்டமிட்டு மட்டு வாக்காளர்களை ஏமாற்றியமை இன்று அம்பலமாகியுள்ளது......சம்பந்தனின் அறிக்கை
கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிங்காரவேலு தண்டாயுதபாணி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சும்பந்தன் தலைமையில் சற்றுமுன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுரேஸ் பிரேமசந்தின், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஆனந்தசங்கரி ஆகியோரைத் தவிர தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது..... தனிமனித முடிவு என்பது அழிவை நோக்கி நகரும் என்றூ கிழக்கு மாகாண மக்கள் முனு முனுக்கிரார்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire