mardi 25 septembre 2012

அதிர்ச்சி தகவல் : பள்ளி மாணவிகளை செக்ஸ் அடிமைகளாக்கிய கடாபி

 லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி, பள்ளி மாணவிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்து சித்ரவதை செய்தார் என்று புது புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கடாபி. இவரை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்பட்டது. ராணுவம் மூலம் மக்களை கொன்று குவித்தார் கடாபி. கடைசியில் புரட்சி படையினரால் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கொல்லப்பட்டார். இந்நிலையில், பிரான்ஸ் நிருபர் அன்னிக் கோஜீன் என்பவர், கடாபியின் கொடுமைகள் பற்றி புத்தகம் எழுதி உள்ளார். அதில், பள்ளி மாணவிகளை கடாபி கடத்தி, செக்ஸ் அடிமைகளாக்கி சித்ரவதை செய்தார் என்று கூறியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு சொராயா என்ற 15 வயது மாணவியை கடாபி கடத்தி சென்று எப்படி எல்லாம் செக்ஸ் சித்ரவதை செய்தார் என்பதை கோஜீன் தனது புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார். கடாபியின் பிடியில் சொராயா 5 ஆண்டுகள் சித்ரவதை அனுபவித்துள்ளார். அவரது அரண்மனையில் ஏராளமான பள்ளி மாணவிகள் இருந்துள்ளனர். அவர்களை தன் சொல்படி நடக்கும் வகையில் கடாபி மாற்றி இருந்தார். கடாபியிடம் மாணவிகள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்களோ அதேபோல் சொராயாவையும் செயல்பட கட்டாய பயிற்சி அளித்துள்ளனர். பல்வேறு வகையில் செக்ஸ் சித்ரவதைகளை அனுபவித்த மாணவிகள் பல ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை குடும்பத்தினரே ஏற்க மறுத்து ஒதுக்கி உள்ளனர் என்று புத்தகத்தில் கோஜீன் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். சொராயாவின் பேட்டியும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் கடாபியின் அந்தரங்க வாழ்க்கை பற்றி சொராயா பல தகவல்களை கூறியுள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire