mardi 25 septembre 2012

இலவசக் கல்விக்கு பாதுகாப்பு வழங்கு


யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடுத்தெருவில்; இலவசக் கல்விக்கு பாதுகாப்பு வழங்கு
news
பல்கலைக்கழக பேராசிரியர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் மாபெரும் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது.

 யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இப்பேரணியை ஒழுங்கு செய்திருந்தது. இப்பேரணி இன்று காலை 9 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி வழியாக நெல்லியடி,அச்சுவேலி,புத்தூர் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளூடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இதில் அரச கல்வியை காப்பாற்று,பல்கலைக்கழகம் கோமாழிகளின் கூடாரங்களல்ல!, பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாப்போம், உறுதியளித்த சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்ந்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.



 

Aucun commentaire:

Enregistrer un commentaire