samedi 29 septembre 2012

ஊழல் மோசடிகள் செய்யக் கூடிய துறைக்கே அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கும்: ரோசி சேனாநாயக்க குற்றச்சாட்டு!


ஊழல் மோசடிகள் செய்யக் கூடிய துறைக்கே அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். கல்வித்துறையில் மோசடி செய்ய முடியாத காரணத்தினால் அரசாங்கம் அதிக பணத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதில்லை.
எமது நாட்டின் கல்வித்திட்டம் பிரமிட் கட்டமைப்பை ஒத்தது. ஆரம்பத்தில் பலர் இதில் இணைந்து கொள்வார்கள். எனினும், இறுதியில் ஒரு சிலர் மட்டமே எஞ்சுகின்றனர்.
பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதே பெற்றோரின் இலக்காகக் காணப்படுகின்றது. உலகின் வறிய நாடுகள் கூட அதிகளவான பணத்தை கல்வித்துறைக்காக ஒதுக்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் ஊடாக கல்வித்துறை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
பாடசாலை மாணவ மாணவியருக்கு பகல் உணவு வழங்குதல், ஒவ்வொரு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய பாடசாலை ஒன்றை நிறுவுதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire