dimanche 30 septembre 2012

இராணுவத்துக்காக காணி சுவீகரிக்க வேண்டாம்'



இலங்கை உச்சநீதிமன்றம்இலங்கை உச்சநீதிமன்றம்அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கேசன்கேணி மக்களில் சிலர் தாக்கல்செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது குடியிருப்பு பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்க வேண்டியிருப்பதால் அங்கிருந்து தம்மை வெளியேறுமாறு உத்தரவிட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இந்த அறிவித்தலை அடுத்து பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்னும் 50 குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கேசன்கேணி மக்கள் வழக்கில் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களின் வாழ்விடப் பிரதேசங்கள் பெருமளவில் இராணுவ முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களின் வாழ்விடப் பிரதேசங்கள் பெருமளவில் இராணுவ முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
இந்த மனுதொடர்பில் அரச தரப்பு விளக்கங்களை முன்வைத்த சட்டமாஅதிபர், இராணுவமுகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றிடங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறினார்.
குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களுக்கு அந்த தொழிலை கொண்டுநடத்தக்கூடிய விதத்திலான மாற்றுக்காணிகளே வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் அக்டோபர் 17-ம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், மாற்றுக் காணிகளை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அன்றைய தினம் அறிவிக்கவேண்டும் என்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire