samedi 15 septembre 2012

இங்கிலாந்திலிருந்து 3 விமானங்களில் இலங்கை தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்ற இலங்கை தமிழர்களில் பெருந்தொகையானோர் வருகின்ற புதன்கிழமை திருப்பியனுப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் இந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

தங்களை இலங்கைக்கு திருப்பியனுப்பினால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகுவோம் என அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களில் பலர் கோரியபோதிலும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பியனுப்பப்படவுள்ளனர். 

சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கருத்துக்கூற மறுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire