mardi 8 janvier 2013

திருவள்ளுவர் சிலை பராமரிப்பு: ஜன.19ல் குமரியில் கருணாநிதி ஆர்ப்பாட்டம்


திருவள்ளுவர் சிலையைப் பராமரிக்கக் கோரி கன்னியாகுமரியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.
கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையைப் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக சார்பில் ஜனவரி 19-ம் தேதி குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும் சிலையைப் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுகவே செலவு செய்து, பராமரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire