lundi 7 janvier 2013

பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு .ஹோட்டல்களிற்கு சீல் வைப்பு

தம்புள்ளை நகரப்பகுதியில் பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பாவனைக்கு உதவாத உருளைக்கிழங்குகளை இரவு நேரங்களில் சோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது 85 ரூபா பெறுமதியான கிழங்குகள் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பாவனைக்கு உதவாத கிழங்குகள் 35 ரூபாவிற்கு விற்பனையாகின்றன. இந்த கிழங்குகள் ஹோட்டல்களில் சிற்றுண்டிகள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட தம்புள்ளை நகரசபை அதிகாரிகள் 3 ஹோட்டல்களிற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் 10 ஹோட்டல்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire