dimanche 27 janvier 2013

245 பேர் பலி பிரசிலின் தென்பகுதி நகரான சன்டா மரியாவில்


பிரசிலின் தென்பகுதி நகரான சன்டா மரியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தபட்சம் 245 பேராவது இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு ஒரு இசைக்குழு வாணவேடிக்கையை செய்ய ஆரம்பித்ததும், ஞாயிறன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் இந்த தீ ஆரம்பித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.
அந்த இரவு விடுதிக்கு ஒரேயொரு வாயில் மாத்திரம் இருந்ததாகவும், ஆகவே ஆட்கள் தப்பியோட புறப்பட்டதும், அங்கு பதற்றம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
அந்த தீயின் தீவிரம் காரணமாக அந்த கட்டிடம் இடிந்துவிழுந்துவிடும் என்று தீயணைப்பு படையினர் அச்சம் கொண்டிருந்தனர்.
அந்த நகரின் பிணக்கிடங்கில் அவ்வளவு சடலங்களையும் கொண்டு வைக்க முடியாத காரணத்தினால், உள்ளூர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் தற்காலிக பிணக்கிடங்கு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
சன்டா மரியா ஒரு பல்கலைக்கழக நகராகும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாவர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire