dimanche 27 janvier 2013

இந்தியாவின் 64வது குடியரசு தினம் யாழில்


இந்தியாவின் 64வது குடியரசு தினம் இன்று (26) யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.  யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தலைவரின் உரையினை நிகழ்த்தினார்.  இந்திய இராணுவ அணிவகுப்புடன் நடைபெற்ற இந்த குடியரசு தினத்தில் இந்திய வம்சாவழி குடிமக்கள் கலந்து கொண்டனர். 
இந்திய குடிமக்கள் பலர் கலந்து கொண்டதுடன் இந்திய வர்த்தகப் பெருமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவின் 64வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (26) மாலை தனியார் விருந்தினர் விடுதியில் இந்திய கலாச்சார நிகழ்வுகளும் நடனங்கள் நடைபெறவுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire