jeudi 24 janvier 2013

தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில்

தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கலந்து பாடுவதற்கான யோசனையொன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் கலந்து பாடுவதற்கான இந்த யோசனை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக்கீதத்தை திருகோணமலையில் நடைபெறவிருக்கின்ற 65 ஆவது சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த யோசனைக்கு ஜனாதிபதியிடமிருந்து அனுமதி கிடைத்ததன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire