jeudi 29 novembre 2012

13வது திருத்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை

தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவு செய்யப்படும் வகையிலும் அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்கிய பின்னரே 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென பிரதி பொருளாதார அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 13 வது திருத்தத்தினூடாக எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத போதும் அதனை ஒரேயடியாக ரத்துச் செய்ய முடியாது. முதலில் அதற்கு மாற்றுத் தீர்வொன்று காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண கொண்டுவரப்பட்ட13 ஆவது திருத்தத்தை ஒரேயடியாக மாற்ற முடியாது. முதலில் அதற்கு மாற்aடாக வேறு தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும் வகையில் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கிய பின்னரே அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire