vendredi 30 novembre 2012

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்
மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள மாணவர்களே கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்டது. பல்கலைக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள கலகா சந்தியில் இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சுலோக அட்டைகளுடன் பெரும்பாலான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த முதலாவது ஆர்ப்பாட்டமாகும். இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக் கழகத்திலும் சிங்கள் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக் கழக மாணவர் மீது கைவையாதே!, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து! போன்ற சுலோகங்களுடன் போராட்டம் நடைபெற்றது. புலம் பெயர் நாடுகளில் இது வரை நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று இந்த மாணவர் எழுச்சியையும் இனவாதப் போராட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்காமல் மாணவர்களின் நலன் சார்ந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் போராட்டமாக ஆதரவுப் போராட்டங்கள் நடத்தப்படும் என எதிர்பார்போம். 
தலைவர் மேலேயா கீழேயா என்ற ஆராச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சரி, சிங்கள மாணவர்கள் போராடினார்கள் என்று கேள்விப்பட்டாலே சிறீலங்கா அரசாங்கத்தை விட அதிகம் ஆத்திரமடையப் போவது புலம் பெயர் கனவான்கள் தானே!

Aucun commentaire:

Enregistrer un commentaire