mercredi 7 novembre 2012

இலங்கை சண்டேலீடர் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியரை பிடியாணை பிறப்பித்துள்ளது.

 சண்டேலீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா ஜான்ஸுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நாடளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து செய்திகளை பிரசுரித்தார் என்ற குற்றச்சாட்டில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதியரசர் எடுத்துக்கொண்டார்.

இதன்போது சண்டேலீடர் பத்திரிக்கையின் ஆசிரியரான பெற்றிக்கா ஜான்ஸ் நீதிமன்றில் ஆஜராகாததை அடுத்தே மேன்முறையீட்டு நீதியரசர் பிடியாணை பிறப்பித்து வழக்கை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை வெளிநாடு ஒன்றில் சண்டேலீடர் பத்திகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பெற்றிக்கா தஞ்சம் அடைந்திருப்பது அக்னிசெய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
ஆயுதம் ஆரம்பம்வெள்ளைக்கொடி விவகாரம் முதல்,கோத்தபாய மனைவிக்கு நாய் குட்டி இறக்குமதி . இலங்கை இராணுவத்தின் போர்குற்றங்களை அம்பலப்படுத்திய, முக்கியமான நபர்களில் ஒருவரான சண்டே லீடர் ஊடகத்தின் ஆசிரியர் பிரற்றிக்கா ஜோன்ஸ் ஆவார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire