samedi 24 novembre 2012

பிரபாகரன் பெயரை வழக்கிலிருந்து நீக்கக் கோரி க்கை


சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 ஆம் ஆண்டு  ிடுதலைப்புலிகளுக்கும்பிளாட்இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை  தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று  சிபிசிஐடி போலீசார்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப்புலிகள்இயக்கத்தை  ேர்ந்தவர்களுக்கும்பிளாட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச்சண்டை  நடந்ததுவிடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்ராகவன் (எ) சிவகுமார் ஆகியோர் சுட்டதில் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன்முகுந்தன் (எ) உமா மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்துபிரபாகரன் மற்றும் சிவகுமாரை மாம்பலம் போலீசார் கைது செய்து  அவர்கள்மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  இந்நிலையில்,மே 23ம் தேதி சிவனேஷ்வரன(எ) நிரஞ்சன் சைதாப்பேட்டையில் கைது  செய்யப்பட்டார்மே25ம் தேதி கும்மிடிப் பூண்டி ரயில் நிலையத்தில் உமா  மகேஸ்வரனை போலீசார் கைதுசெய்தனர்.

இவர்கள் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ாமீனில் வெளிவந்த இவர்கள் தலைமறைவானார்கள்.இந்த வழக்கு 7 ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

பேர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்டநாட்களாக வழக்கு விசாரணை நடந்து தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுசிபிசிஐடி சார்பில் 3  மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,"முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபாகரன் இலங்கையில் நடந்த போரில் ொல்லப்பட்டார்.அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 19 ல்  கண்டுபிடிக்கப்பட்டதுஎன்று டெல்லியில் உள்ள இன்டர்போல் உதவி இயக்குனர் தகவல்  அனுப்பியுள்ளார்.

சிவகுமார் இந்தியாவைவிட்டு வெளியேறி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் இல்லைஜோதீஸ்வரன்ஹாங்காங் நாட்டில் இருப்பதாக தகவல வந்துள்ளதுநிரஞ்சன் இறந்துவிட்டதாக சிபிசிஐடிக்கு தகவல் வந்துள்ளது.

எனவேஇந்த வழக்கிலிருந்து பிரபாகரன்சிவகுமார்ஜோதீஸ்வரன்நிரஞ்சன்  ஆகியோரைநீக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனு
 விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire