lundi 26 novembre 2012

நூற்றுக்கணக்கான சிறார்களை சீரழித்த பாலியல் குற்றவாளி சிறிலங்காவில்.......கவனம்...

அவுஸ்ரேலியாவில் நூற்றுக்கணக்கான சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கத்தோலிக்கத் திருச்சபையின் முன்னாள் அருட்சகோதரர் நியுசிலாந்தில் இருந்து சிறிலங்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். 

சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நியுசிலாந்தில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேனாட் கெவின் மக்கிராத் என்ற முன்னாள் அருட்சகோதரர், மீது நியுகாசில் நீதிமன்றத்தில் 252 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

இவர் 1970,80களில் நியுசவுத்வேல்சில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட அமைப்புகளில் டசின் கணக்கான சிறார்களை வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். 

இவரை நியுசிலாந்தில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளை நியுசவுத்வேல்ஸ் காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், நியுசிலாந்தில் இருந்து வெளியேறிய அவர் சிறிலங்காவில் தஞ்சடைந்துள்ளார். 

மலையகத்தில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் அவர் தங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. 

7 -15 வயதுக்கிடைப்பட்ட 9 சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியதாக, பேனாட் கெவின் மீதான 22 குற்றச்சாட்டுகள் 2006ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து,அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் பெண்கள், சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாகவும் சிறிலங்கா மாறத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire