jeudi 21 février 2013

2 அணுஉலை துவக்கப்படும் ; பார்லி., கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் பேச்சு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.கடந்த ஆண்டில் பணவீக்கம் பெரும் கவலை தருவதாக அமைந்துள்ளது. இலங்‌கை தமிழர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்கு மத்திய அரசு முழு நடவடிக்கை எடுக்கும். இவர்கள் அமைதியாக வாழ வழிவகை காணப்படும் என்றும் , இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் இந்த ஆண்டு 2 அணு உலை செயல்படும் என்றும் மேலும் 2 அணு உலைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

நேரடி மானிய திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் ஊழல் குறைய வழி ஏற்படும். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வரும் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் முக்கிய திட்டங்கள் வரையப்பட்டுள்ளது. உணவு தானியம் உற்பத்தி, பால் உற்பத்தி, உர உற்பத்தி பல மடங்கு பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வேயில் முன்னேற்ற திட்டங்கள் கொண்டு வரப்படும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire