jeudi 7 février 2013

சி. ஐ. ஏ. ஆளில்லா விமானத்தளம் அம்பலம்



அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. சவூதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டு களாக ஆளில்லா விமானத்தளத்தை செயற்படுத்தி வந்தது விபரம் அம்பலமாகி யுள்ளது. யெமன் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் அரேபிய தீபகற்பத்திற்கான அல்-கொய்தா உறுப்பினர்களை வேட்டையாடவே சி. ஐ. ஏ. சவூதி அரேபிய தளத்தை பயன்படுத்தியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் பிறந்த அல்கொய்தா முன்னணித் தலைவர் அன்வர் அவ்லாக்கி மீதான ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா சவூதி அரேபிய தளத்திலிருந்தே செயற்படுத்தியுள்ளது.அப்போது தொடக்கம் இந்த ஆளில்லா விமானத் தளம்பற்றி அமெரிக்க ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தபோதும் அதனை வெளிப்படுத்தவில்லை. எனினும் இந்த ஆளில்லா விமானத் தளம் குறித்த தகவலை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த தளத்திலிருந்து முதல் தாக்குதலை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவிலேயே யெமனில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யெமன் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு அந்நாட்டு அரசிடமிருந்து அனுமதி பெறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire