dimanche 24 février 2013

சம உரிமை இயக்கத்தின் மாபெரும் கையெழுத்து வேட்டை


batti demo
சம உரிமை இயக்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கெயெழுத்து வேட்டையொன்று இன்று   மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மொபெரும் கையெழுத்து வேட்டையில் வட-கிழக்கில் இரானுவ ஆட்சியை உடன் நிறுத்து, -கிழக்கில் அரசியல் சிறைக்கைதிகளை உடன் விடுதலை செய், கைதுகள் கடத்தல்களை உடன் நிறுத்து,  மக்களிடம் கொள்ளையிடுவதை உடன் நிறுத்து,  வட-கிழக்கு மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது.  மட்டக்களப்புக்கு  பிரயாணிகள்,  பாதசாரிகள், வியாபாரிகள் மட்டு வாழ் மக்கள் என பலரும் இக்கையெழுத்து வேட்டையில் கையொப்பமிட்டு வருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire