samedi 23 février 2013

படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருக்கின்றனர்.: கோட்டா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடையது எனக் கூறி செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்தார். 

'இராணுவ அடையாளம் தெரியாத படங்களை பார்த்துவிட்டு, அச்சிறுவன் இராணுவத்தின் பதுங்கு குழியில் உள்ளார் என செனல் 4 எவ்வாறு கூற முடியும்?' எனவும் பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பினார். 

'படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருக்கின்றனர். இந்த படங்களை எடுத்தவர் யார்? அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிறுவர்களைப் பற்றி பேசுவதில்லை.

தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளவும் சயினைட் குளிசைகளை சப்பி சாப்பிடவும் பயிற்றப்பட்ட சிறுவர் போராளிகளைப் பற்றியும் இவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire