dimanche 17 février 2013

கடவுச்சீட்டு வழங்குவது கடினம்..இஸ்லாமியப் பெண்களில் சிலர் அணியும் ‘புர்கா’வினால்

‘இஸ்லாமியப் பெண்களில் சிலர் அணியும் ‘புர்கா’வினால் அவர்களுக்கு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு கடவுச் சீட்டு வழங்குவதற்குக் கடினமாக இருக்கின்றது.’ இவ்வாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பங்களில் புர்காவிலுள்ள முக மறைப்பை விலக்குமாறு வேண்டுகோள் விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார

பெண்களுக்கு முகமூடியை விலக்கிக் கொள்ளுமாறு கூறப்படும்போது, அது நிராகரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டாளர், கடவுச் சீட்டு வழங்கப்படும்போது அறிவிக்கப்படும் வேண்டுகோள்களுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் சந்தர்ப்பத்தில் தமக்கு அதுபற்றி அறிவிக்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire