dimanche 11 août 2013

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வரும் நவநீதம்பிள்ளை


ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தவார இறுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி அரசசார்பு ஆங்கில வாரஇதழான சண்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வரும் நவநீதம்பிள்ளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்வார்,
மேலும் சிறிலங்கா அரசாங்கத்தரப்பு, எதிரணி அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடுவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் கொழும்பு வருவதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மாதம் 25ம் நாள் தொடக்கம், 31ம் நாள் வரையில் ஒரு வாரகாலம் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளதாக முன்னர் ஐ,நா தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த வாரஇறுதியில் அவர் சிறிலங்கா வருவது தொடர்பாக ஐ.நா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire