dimanche 25 août 2013

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும் இத்தறுனத்தில் இலங்கையை வந்தடைந்தார்?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.தனது வடக்குப் பயணத்தின் போது அவர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். 
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், சமகால அரசியல் நிலைமைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது பயணத்தின் போது விரிவாக ஆராயவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire