கடற் கொள்ளையர்களிடமிருந்து வர்த்தக கப்பல்களைக் காப்பாற்றும் நோக்கில் கொழும்பு துறைமுகத்தை முக்கிய தளமாகப் பயன்படுத்த நெதர்லாந்து கடற்படை தீர்மானித்துள்ளது. இலங்கை கப்பல் போக்குவரத்தில் முக்கிய கேந்திர நிலையமாக விளங்குவதால் கொழும்பு துறைமுகத்தினை கப்பல் பாதுகாப்பு மையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கப்பல்கள் நெதர்லாந்து பாதுகாப்பு படையினரை இலங்கையின் சில துறைமுகங்களில் ஏற்றி இறக்கும் ஒழுங்கொன்று இலங்கை அரசாங்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை சட்டத்துக்கு அமையவே ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் கையாளப்படுமெனவும் நெதலாந்து தூதரகம் குறிப்பிட்டுள்ளது. கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அதிகமாக சோமாலிய கரைக்கு அப்பால் அரபுக்கடலில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையிலே இலங்கையுடன் இத்திட்டத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.vendredi 1 février 2013
கொழும்பை தெரிவுசெய்ய நெதர்லாந்து முடிவு .கடற் கொள்ளையர்களை தடுக்கும் மையமாக
கடற் கொள்ளையர்களிடமிருந்து வர்த்தக கப்பல்களைக் காப்பாற்றும் நோக்கில் கொழும்பு துறைமுகத்தை முக்கிய தளமாகப் பயன்படுத்த நெதர்லாந்து கடற்படை தீர்மானித்துள்ளது. இலங்கை கப்பல் போக்குவரத்தில் முக்கிய கேந்திர நிலையமாக விளங்குவதால் கொழும்பு துறைமுகத்தினை கப்பல் பாதுகாப்பு மையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கப்பல்கள் நெதர்லாந்து பாதுகாப்பு படையினரை இலங்கையின் சில துறைமுகங்களில் ஏற்றி இறக்கும் ஒழுங்கொன்று இலங்கை அரசாங்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை சட்டத்துக்கு அமையவே ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் கையாளப்படுமெனவும் நெதலாந்து தூதரகம் குறிப்பிட்டுள்ளது. கடற்கொள்ளையரின் தாக்குதல்கள் அதிகமாக சோமாலிய கரைக்கு அப்பால் அரபுக்கடலில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையிலே இலங்கையுடன் இத்திட்டத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire