mardi 9 octobre 2012

தலை, கைகள் இரண்டும் வெட்டி துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞனது சடலம் மீட்பு !


மாத்தறை, ஹிந்தட்டிய பிரதேசத்தில் தலை மற்றும் கைகள் இரண்டும் வெட்டி துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 26 வயதுடைய இளைஞர் ஒருவரது என மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞர் கடந்த ஆறாம் தகதியிலிருந்து காணாமற் போயுள்ளதாக அவரது தாயாரால் மாத்தறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை வடக்கு களுகங்கையில் மிதந்த பெண் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire