dimanche 31 mars 2013

இலங்கைக்கு வலது கையாலும் புலிகளுக்கு இடது கையாலும் போராயுதங்களையும் அதற்கான அலோசனைகளையும் மேற்குலகம் வழங்கியது;கேபி

இலங்கை மீது போர்குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது மேற்குலகம். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும் மேற்குலகிற்கும் அண்ணன் தம்பி உறவு என்பது ஒன்றும் இரகசியமானது அல்ல. இறுதி வரைக்கும் இலங்கைக்கு வலது கையாலும் புலிகளுக்கு இடது கையாலும் போராயுதங்களையும் அதற்கான அலோசனைகளையும் மேற்குலக வழங்கி கொண்டு வந்திருக்கின்றது என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இவ்விடயத்தினை கடந்த வாரம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் தெரிவித்திருந்தார். எந்த நாடுகள் புலிகளுக்கு உதவின என்றும் எவ்வாறு எந்த நோக்கத்திற்காக வழங்கின என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் புலிளியக்கத்தின் ஆயுதக்கடத்தன் மன்னனான கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் „புலிகள் இயக்கத்திற்கு 11 நாடுகள் ஆயுத உதவியைச் செய்தன. ஆயுதங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களையும் கொடுத்து உதவின. அந்த நாடுகள் குறித்த தகவல்களை முழுமையாக வெளியிடுவேன்' என்று கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire