dimanche 24 mars 2013

குழி வெட்டும்போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பணிச்சங்கேணி பகுதியில் மனித எச்சங்கள் கொண்ட புதைக்குழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
பணிச்சங்கேணி, எல்லத்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடுவதற்காக குழி வெட்டும்போதே இந்த புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழி வெட்டும்போது மனித எலும்புக்கூடுகள் தென்படுவதைத் தொடர்ந்து அது தொடர்பில் வாகரை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்றுள்ள வாகரை பொலிஸார் குறித்த பகுதியில் இடம்பெற்றுவரும் வேலைகளை நிறுத்தியுள்ளதுடன் குறித்த பகுதிக்கு பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.
மனித புதைகுழி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire