dimanche 31 mars 2013

மீண்டும் தலை தூக்கி உள்ள யாழ் வாள் சன்டைகள்

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வாள் வெட்டில், ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ். மாநகரசபை ஊழியர்கள் ஐவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவாந்துறை மீன்சந்தை குத்தகைக் குழுவினருக்கும் யாழ். மாநகரசபை ஊழியர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire