dimanche 31 mars 2013

மிரட்டும் இலங்கை சுதந்திர கட்சியை செர்ந்த துனை தலைவர்களூள் ஒருவரனா கருணா;புலிகளுக்கு உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலை வெளியிடுவேன்


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கிய நபர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் எனக்கு மட்டுமெ தெரியும். நோர்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் விஜயம் செய்திருக்கின்றேன்.
409 ரக ஆயுதங்கள் தொடர்பான பட்டியல் ஒன்றை பங்கொக் ஹோட்டல் ஒன்றில் வைத்து ஐயர் என்ற நபருக்கு நானே வழங்கினேன். இந்தப் பட்டியலை வழங்குமாறு பிரபாகரன் எனக்கு பணிப்புரை விடுத்தார்.
நோர்வே ஆயுத நிறுவனங்களுக்கும் நான் விஜயம் செய்திருந்தேன். கண்ணாடி மாளிகைகளிலிருந்து கற்களை எறிய வேண்டாம் என அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கேட்கின்றேன்.
அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளக்கு உதவிகளை வழங்கியிருந்தன.
துப்பாக்கி துளைக்காத பிராடோ ரக வாகனமொன்றை அரச சார்பற்ற நிறுவனமொன்று பிரபாகரனுக்கு வழங்கியிருந்தது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Karuna Back from Parisஅண்மையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு மனித உரிமை கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நோக்கில் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire