vendredi 8 mars 2013

தமிழீழம் அமைப்பது குறித்து வாக்கெடுப்பு அவசியம் - மு.க.ஸ்டாலின்!

இலங்கையில் தனித் தமிழீழம் அமைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

   டெல்லியில் நேற்று நடைபெற்ற டெசோ தீர்மான விளக்க கருத்தரங்கில் பேசிய மு.க. ஸ்டாலின், இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

   இக்கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், இலங்கைப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயேச்சை ஆணையத்தை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire