samedi 30 mars 2013

பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் உள்ள பெரிய பிரச்சினை முடி உதிர்தல் ஆகும்;பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் உள்ள பெரிய பிரச்சினை முடி உதிர்தல் ஆகும்.
இவர்கள் கீழே உள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றி முடிஉதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
* முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.
* முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயர்ன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.
* தற்போது ஏகப்பட்ட பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
* எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
* கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire