mardi 25 mars 2014

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி 107 பேர் பலி

உகாண்டாவில் எதிர்பாராதவிதமாக படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில், 107 பேர் பரிதாபமாக பலியாயினர்.
ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டில் இருந்த காங்கோவை சேர்ந்த 250 அகதிகள் மீண்டும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அவர்கள் ஒரு பெரிய படகில் ஆலபர்ட் ஏரியில் வந்து கொண்டு இருந்தனர், அப்போது எதிர்பாரதவிதமாக படகு மூழ்கியதில் 107 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், இதுவரையிலும் 41 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire