lundi 3 mars 2014

இலங்கைத் தமிழர்களின் மசாலா தூள் வகைகளில் புற்றுநோய்: ஐரோப்பிய பிரபல பத்திரிகை

Tuilகொழும்பு ஆமர் வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களை தயாரித்து வந்த நிலையம் ஒன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் சுற்றி வளைக்கப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

இதன்போது பாவனைக்கு உதவாத 5,000 கிலோ கிராம் மிளகாய்த் தூள், 3,000 கிலோ கிராம் மஞ்சள் தூள் மற்றும் 2,000 கிலோ கிராம் மசாலா தூள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்துடன் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்ட கேடு விளைவிக்கும் திரவஉணவுப் பொருட்களின் பெறுமதி 30 லட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

வர்த்தகர்களுக்கு விநியோகிக்க தயாராகவிருந்த போது இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று முன்னரும் பலமுறை மலசல கூட ங்கள் சுத்திகரிக்கும் தி ரவாகத்தை பயன்படுத்தி சிலவகை உணவுப்பொருட்களுக்கு காரத்தன்மை அதிகரிக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்று அப்பொருட்களை சுகாதாரப்பகுதியினர் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது அதேபோன்று சில தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை க்கொண்டு பழவகைகளும் பதப்படுத்தி வியாபாரம் செய்வதை சில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.

அண்மையில் ஐரோப்பிய நாடொன்றின் பிரபல பத்திரிகை ஒன்று இலங்கைத் தமிழர் பயன்படுத்தும் பல மசாலா தூ ள் வகைகளில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய இரசாயன செறிவு அதிகம் என்று தகவல் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாடானது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத நிலையிலும் புலம்பெயர் தமிழ் சமூகத்தை நோக்கி குறிப்பிடத்தக்க அளவு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது இதன் மூல ம் பெரும் வியாபாரப் போட்டியும் நடை பெறுகின்றது.

அதிக இலாப நோக்கத்தினால் ஊழல் நிறைந்த நிர்வாகத்திடம் கட்டுப்பாடற்ற மோசடிகளும் கலப்படங்களும் அடைபெருகின்றது இவற்றை அறியாது தமிழர்களும் இப்பொருட்களை வாங்கி பயபடுத்துகின்றனர்
புலம்பெயர் தேசங்களில் பல தமிழர்களுக்கு பல அதிசயமான நோய்கள் தாக்குவதும் பலர் எதிர்பாராத நோய்தாக்கி மரணமாவதும் இன்று சாதாரணமாகிவிட்டது  இவற்றுக்கு இவ்வாறான உணவுப் பயன்பாடும் காரணமாகலாம் எனவே தமிழர்கள் இந்த விடயத்தில் விழிப்படைய வேண்டும்

Aucun commentaire:

Enregistrer un commentaire