mercredi 26 mars 2014

இன்னும் எதற்காக பேச்சுவார்த்தை?எடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் இன்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவ்விதமான முன் நிபந்தனைகளும் விதிக்காவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கடந்த வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எனினும், மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமைத்துவம் இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும், மாகாணசபை உறுப்பினர்களினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் முடியாவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுககொள்ள முடியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், இதுவiரியல் தமக்கு தென் ஆபிரிக்க அதிகாரிகள் அழைப்பு விடு;க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire