lundi 31 mars 2014

நாட்டை விட்டு விரட்ட வேண்டும் : ரேகர்

ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹிராலால் ரேகர், டோங்க் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, சோனியா, ராகுலை நாட்டை விட்டு இத்தாலிக்கு துரத்த வேண்டும் என்று பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிர்ச்சாரத்தின் போது பேசிய ரேகர், பிரதமராக மோடியே பதவியேற்க உள்ளார். சோனியாவையும், ராகுலையும் நாட்டை விட்டு, இத்தாலிக்கே விரட்டியடிக்க வேண்டும் என்று கடுமையாகப் பேசியுள்ளார்.
இதனால், பாஜக மூத்த தலைவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire