lundi 24 mars 2014

162 பேர் படுகொலை: புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு!

மட்டகளப்பு குருக்கள்மடம் மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளில் வைத்து 12.07.1990 அன்று காத்தான்குடியைச் சேர்ந்த 162 பேர் கடத்தப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை நேற்று சனிக்கிழமை மாலை காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆணைக்குழுவிடம் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இவ் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளது.
காணாமற் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் அதன் உறுப்பினர்களான காஞ்சனா வித்தியாரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகியோரும் குழுவின் சட்டத்தரணிகளும் அதிகாரிகளும் இந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதன்போது ஆணைக்குழுவினர் இந்த இடம் மற்றும் கடத்தப்பட்டவர்களின் விபரங்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கிடம் கேட்டறிந்து கொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire