samedi 8 mars 2014

விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் 5 இந்தியர்கள் இருந்ததாக தகவல் 75 ஹெலிகாப்டர்கள் விரைவு

பயணிகள் விமான விபத்து குறித்து மலேசிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பகுதிக்கு 75 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் விபத்தில் சிக்கிய பயணிகள் யாரேனும் உயிருடன் இருக்கின்றனரா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 இந்தியர்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் அருகே தென் சீன கடலில் அதிகாலை விழுந்து நொறுங்கிது. இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது. இதில் சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மாவும் ஒருவராவர். அரியானா மாநிலத்தை சேர்ந்த சந்திரிகா சென்னை அடையாரில் உள்ள பரமேஸ்வரில் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஐ.சி.எஸ்.எப். என்னும் நிறுவனத்தின் பிரதிநிதியாக அவர் இருந்தார். 

மங்கோல்யாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்க அவர் சென்றதாக கூறப்படுகிறது. கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று அங்கிருந்து மங்கோல்யா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது.

Aucun commentaire:

Enregistrer un commentaire