jeudi 6 mars 2014

கேரள பெண் சாமியார், சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலம்!

கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய கெயில் ட்ரெட்வெல் என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.

பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயி-யின் மடம் வாக்குறுதி அளித்தது. மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் தான் எழுதிய 'ஹோலி ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire