lundi 10 mars 2014

தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஜெனீவா பிரேரணையை எதிர்த்து கல்முனையில்

Kalmunai town* பிரதேச செயலரிடம் மகஜரும் கையளிப்புகல்முனை சிவில் சமூகம் ஏற்பாடுகல்முனை வாழ் தமிழ் மக்களினால் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்தும் வகையில் மாபெரும் ஆதரவுப் பேரணி ஒன்று  கல்முனை நகரில் நடைபெற்றது.கல்முனை நகரில் தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட வரலாறு காணாத இவ் ஆதரவுப் பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதியின் ஆதரவுப் பேரணியினை கல்முனை தமிழ் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது. கல்முனை நகரில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை இப் பேரணியின் நீளம் அமைந்திருந்தது.அதிகளவிலான பெண்கள் இவ் ஆதரவுப் பேரணியில் கலந்துகொண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது. வயது வித்தியாசம் இன்றி முதியோர் தொடக்கம் சிறுவர்கள் வரை ஜனாதிபதியின் படத்தினையும், தேசியக் கொடியினையும் தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire